Formation of BSNL Department of Telecom Services (DTS) and Department of Telecom Operations (DTO) were corporatised on 1st October 2000 with the name Bharat Sanchar Nigam Limited (BSNL). BSNL Employees Union Is Born The Joint Conference held on 21st –22nd March, under a presidium consisting of the Presidents of all the unions being merged, unanimously adopted the Resolution forming BSNL Employees Union and the Constitution of the union with thunderous applause.
இணைப்புகள்
செய்திகள்
மத்திய சங்க செய்திகள்
GPF PAYMENT மற்றும் ஒப்பந்த ஊழியர் , காசுவல் ஊழியர் சம்பளம் ஆகியவற்றிற்காக நிதி ஒதுக்கீடு செய்ய பொதுச்செயலர் மற்றும் துணைப்பொதுச்செயலர் ஆகியோர் DIRECTOR(F) அவர்களை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்
BSNLலின் நஷ்டம் 10,000 கோடியிலிருந்து 8200 கோடியாக குறைந்துள்ளது.
78.2 இணைப்பை வலியுறுத்தி FORUM OF BSNL யூனியன்ஸ்/ அசோசியேசன்ஸ் போராட்ட அறைகூவல் விடுத்துள்ளது.
22-05-2013 - ஆர்ப்பாட்டம்
05-06-2013 - தர்ணா
12-06-2013 - காலவரையற்ற வேலைநிறுத்தம்
FORUM அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டங்களை வெற்றிகரமாக்கவும் , கிளைகளில் பிரச்சாரப்படுத்தவும் வேண்டுகிறோம்.
மாவட்டச்செய்திகள்
கோவை மாவட்டத்தில் இரண்டு தோழர்கள் TTA தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1.செளக்கின் T.MECH திருப்பூர்
2.சண்முகசுந்தரம் T.MECH திருப்பூர்
நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்
AGM (ADMN) அவர்களுடன் சந்திப்பு
10-05-2013 அன்று நடைபெற்றது. தோழர்கள் CR,NPR மற்றும் கிளைச்செயலர்கள் பாலகிருஷ்ணன்PGM(O) , S.கிருஷ்ணமூர்த்தி (CTO CENTRAL) உடனிருந்தனர். விவாதிக்கப்பட்டவை
1) CAF(CTO)பகுதிக்கு 2வது சனிக்கிழமை விடுமுறை
2)மனமகிழ் மன்ற இட ஒதுக்கீடு
3)AO(RCPTS) மற்றும் LOANS ADVANCE பிரிவுகளை இடமாற்றம் செய்வது
4)ஒப்பந்த ஊழியர் சம்பள பட்டுவாடா தாமதம்
5)TTA இடமாறுதலில் சில மாற்றங்கள் விடுபட்ட சிலரின் மாற்றங்கள் வலியுறுத்தப்பட்டது.
தோழர்கள்
சரவணன் - பாண்டீஸ்வரன்
சுபாஷினி - வேலுச்சாமி
ராதிகா - காசிலஷ்மி
6) ஊழியர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்குவது
7) SRTOA மற்றும் RM, T.MECH இடமாறுதல்கள்
11-05-2013 அன்று மாவட்ட பொறுப்பாளர்கள் KC,CR,RR மற்றும் மாநில உதவித்தலைவர் VV ஆகியோர் கணபதி கிளைக்கு விசிட் செய்தனர். வங்கி கடன் சம்பந்தமாக இந்தியன் வங்கி பொறுப்பாளர்களை அனுகியுள்ளோம்.13-05-2013 அன்று கிளை மேலாளரை சந்திக்க உள்ளோம். தொடர்ந்து கணபதி கோட்டப்பொறியாளர் அவர்களை பேட்டிக்கண்டோம்.
1)விஷப்பூச்சிகள் நடமாட்டம்
2) டாடாபாத் எஞ்ஜின் ஆல்டர்னெட்டர்
3) GENSET மற்றும் STORES DISPOSAL
4) சங்கனூர் பகுதிக்கு ஒரு TTA ஆகியவை விவாதிக்கப்பட்டது
வாக்களித்த தோழர்களுக்கு நன்றி
தோழர்களே ! வணக்கம்
16-04-2013 அன்று நடைபெற்ற தேர்தலில் மொத்த வாக்குகள் = 1841 . அதில் பதிவான வாக்குகள் = 1782 , தபால் ஒட்டுகள் - 2 , வாக்களிக்காதவர்கள்-57 பேர் . மொத்த சதவிகிதம் -96.85 .
வாக்களித்த தோழர்களுக்கு மாவட்டச்சங்கம் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றது.
6 வது சரிபார்ப்பு தேர்தலுக்காக கடந்த 2 மாத காலமாக ஒரு கடுமையான உழைப்பை தந்த அனைத்து கிளை செயலர்கள் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் ,மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் கிளை சங்க முன்னணி தோழர்கள் , தோழியர்கள் அனைவருக்கும் நமது BSNLEU மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த நன்றியை தெர்வித்து கொள்கிறது
சி.ராஜேந்திரன்
இலவச சிமகார்டுகள் வழங்க உத்தரவு
நமது மாநில சங்கத்தின் முயற்சியால் அனைத்து தோழர்களுக்கும் FREE SIM வழங்க வேண்டும் என்று மாநில கவுன்சிலில் கோரிக்கை வைத்து ,அதை உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டது. நிர்வாகமும் இலவச சிம் கார்டுகள் ஒப்புக்கொண்து.. அதன் படி முதற்கட்டமாக 30 % ஊழியர்களுக்கு வழங்குவதற்கு உத்தரவு வெளியாகி உள்ளது. கோவையில் மட்டும் 295 ஊழியர்களுக்கு இலவச சிம்கார்டுகள் வழங்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது .உத்தரவுகள் கீழே தரப்பட்டுள்ளது
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !
கோவையில் நடைபெற்ற UNITED FORUM சங்கங்கங்களின் தேர்தல் சிறப்புக்கூட்டத்தில் மாவட்ட முழுவதிலும் இருந்து 350க்கும் மேற்பட்ட பெண் தோழியர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.அலைகடலென திரண்டு இருந்த கூட்டத்தை பார்த்த தலைவர்கள .இந்தக்கூட்டம் நமது சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், இபொழுதே நமது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ,நமது வெற்றியில் என்றைக்கும் கோவைக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு என்று பெருமிதப்பட்டார்கள். கீழே புகைப்படங்கள் சிலவற்றை தந்துள்ளோம்.
BSNLEU அமைப்பு தினம்
BSNLEU அமைப்பு தினம்
22.03.2013
BSNLEU அமைக்கப்பட்டு 12 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
நாம் கடந்து வந்த பாதை முட்கள் நிறைந்த கரடு முரடான பாதை !
மத்திய அரசின் ஊழியர் விரோத நடவடிக்கை ஒரு புறம் !
கூடவே இருந்து குழி பறிக்கும் கூட்டம் மறு புறம் !
BSNL ஊழியர் சங்கம்
·போராட்டம் என்ற ஆயுதத்தை ஏந்தி அனைத்து தடைகளையும் தவிடு பொடியாக்கி வெற்றிக் கொடியை நாட்டியுள்ள மாவீரன் !
·BSNL -ல் உள்ள அனைத்து அதிகாரிகள் - ஊழியர்கள் சங்கங்களை அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றிணைத்த ஒற்றுமை நாயகன் !
·ஒன்றுபட்ட சங்கங்களை போராட்ட களத்தில் இறக்கி தலைமை தாங்கும் போர்ப்படை தளபதி !
·பங்கு விற்பனையை முறியடித்து BSNL -ஐப் பாதுகாத்த பாதுகாவலன் !
·ஊழியர்களை வெளியேற்றும் திட்டத்தை எதிர்த்துப் போராடி பணிப் பாதுகாப்பை உறுதி செய்த காவல்காரன் !
·சம்பள மாற்றம், பதவி உயர்வு மற்றும் பல்வேறு சலுகைகள் பெற்றுத் தந்த சாதனை நாயகன் !
·பறிக்கப் பட்ட சலுகைகளுக்காகத் தொடர்ந்து நிர்பந்திக்கும் போராட்டக்காரன் !
·அன்றாடப் பிரச்னைகளில் தலையிட்டு அனைத்திலும் மனநிறைவுடன் தீர்வு கண்ட உற்ற தோழன் !
·ஊழலையும் லஞ்சத்தையும் எதிர்த்த வீரப் போராட்டத்தில் உயிரையும் இழந்த தியாக சீலன் !
·ஊழியர்களின் நம்பிக்கை நட்சத்திரம் !
·அனைவரின் விடிவெள்ளி !!
போராட்டப் பாதையில் நமது பயணம் தொடரும்...!
அமைப்பு தின வாழ்த்துக்கள் !
சாவேஸ் மறைந்தார்:
சாவேஸ் மறைந்தார்:
வெனிசூலா நாட்டின் அதிபர் தோழர் ஹியுகோ சாவேஸ் தனது 58 ஆவது வயதில்
புற்று நோயால் மரணமடைந்தார் என்ற செய்தி வந்துள்ளது. பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாய் இருந்த வெனிசூலா இவர் அதிபராக வந்த பின் பன்னாட்டு கம்பெனிகளின் சுரண்டலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வந்துள்ளது. அந்நாட்டின் எண்ணெய் வளங்களை சுரண்டிக் கொண்டிருந்த பன்னாட்டு நிறுவன்ங்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். அந்நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். நாட்டின் இயற்கை வளங்களில் இருந்து கிடைத்த வருமானத்தை எல்லாம் தன்னாட்டின் சாதாரண மக்களின் ஏழ்மையை துடைக்க பயன்படுத்தினார். இவரது அனைத்து நடவடிக்கைகளும் அமெரிக்க ஏகாதிபாத்தியத்திற்கு கோபத்தை உருவாக்கியது. அவரை ஆட்சியிலிருந்து அகற்ற அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் வெனிசூலா நாட்டு மக்களின் மகத்தான ஆதரவுடன் தொடர்ச்சியாக நான்கு முறை அதிபராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று உலகின் பல நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் உத்தரவிட்ட பொருளாதார கொள்கைகளை அமுலாக்கிக் கொண்டிருக்கும் போது தோழர் சாவேஸ் அதனை நிராகரித்தார். அவர் உழைக்கும் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கான மாற்று பொருளாதார கொள்கைகளை முன்வைத்தார். அதனை தனாது நாட்டில் வெற்றிகரமாக அமுலாக்கினார். அவரால் ஆகர்ஷிக்கப்பட்ட அனைத்து தென்னமெரிக்க நாடுகளும் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் கட்டளையை நிராகரித்து தோழர் சாவேஸ் காட்டிய பாதையில் நடக்க துவங்கியுள்ளனர். தோழர் சாவேஸ்,சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் உழைக்கும் வர்க்க இயக்கத்தின் ஆதர்ஷ சக்தியாக என்றும் விளங்குவார். தோழர் சாவேஸ் கடைபிடித்த கொள்கைகள் வெற்றி பெற உறுதி பூணுவோம்
பாராட்டுக்கள்
பிப்ரவரி 20 மற்றும் 21 தேதிகளில் நடந்த அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தோழர்கள் அனைவருக்கும் மாவட்டசங்கம் புரட்சிகர வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
தர்ணாப்போராட்டம்
FORUM அறைகூவலின்படி கோவையில் நடைபெற்ற தர்ணாவில் சுமார் 400 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 78.2 % பஞ்சப்படி இணைப்பு, ஐ.டி.எஸ். அதிகாரிகளை. இணைத்தல் அல்லது வெளியேற்றம், 2007 க்கு- பின் நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற தர்ணாவில் FORUM தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
Forum அறைகூவல்
78.2 % பஞ்சப்படி இணைப்பை ஒப்புக்கொண்டபடி வழங்க்கோரி Forum அறைகூவலின் படி 15-02-2013 அன்று நாடுமுழுவதும் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. கோவையில் மெயின் தொலைபேசி அலுவலகத்தில் நடைபெறும் தர்ணாவில் தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்பீர்
ஆர்ப்பாட்டம்
78.2 % பஞ்சப்படி இணைப்பை வழங்க்கோரியும் .ஐ.டி.எஸ் அதிகாரிகளை இணைப்பு அல்லது வெளியேற்றம் போன்ற பிரச்சனைகளுக்காக Forum அறைகூவலின் படி 11-02-2013 அன்று நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. நமது மாவட்டத்தில் டெலிகாம் பில்டிங், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், உடுமலை,ஆனைமலை , அவிநாசி பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் தோழர்.சி.ராஜேந்திரன். மற்றும் மாவட்ட, கிளைச்சங்க நிர்வாகிகள் , அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தோழர்கள், மனோகரன், தங்கமணி, மலைச்சாமி, பிரபாகரன் , மற்றும் அதிகாரிகள் , ஊழியர்கள் பங்கேற்றனர்.
தலமட்ட போராட்டம் வெற்றி
திருப்பூரில் நமது கிளைச்சங்கங்களின் சார்பில் தல மட்டப்பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடத்த அறைகூவல் விடுத்திருந்தினர். மாவட்டச்சங்கத்தின் சார்பில் நிர்வாகத்தினரிடம் பேசி பிரச்ச்னைகளை தீர்த்து வைப்பதாக நிர்வாகம் உறுதி அளித்ததையொட்டி போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. போராட்டங்கள் என்றைக்கும் தோற்பதில்லை என்பதையும், போராட்டமே தீர்வு என்பதையும் பறைசாட்டுகின்றது. திருப்பூர் நிர்வாகிகளுக்கு மாவட்டசங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
பல்லடத்தில் 06-02-2013 அன்று நடைபெற்ற கிளை மாநாட்டில்
தலைவர் : தோழர். ஸ்ரீரங்கன்
செயலர் : தோழர். நாகராஜன்
பொருளார் : தோழர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும், சிறப்புக்கருத்தரங்கமும் நடைபெற்றது. கருத்தரங்கில் பல்லடம் கோட்ட பொறியாளர். திரு.ஆறுமுகம் கல்ந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் தோழர். சுப்பிரமணியம், முகமது ஜாபர் , மாவட்டச்செயலர் .சி.ராஜேந்திரன் , மாவட்டசங்க நிர்வாகிகள், தோழர்கள், சக்திவேல், காந்தி, முருகசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில் சுமார் 55 பேர் கலந்து கொண்டனர். புதிய சங்க நிர்வாகிகளுக்கு மாவட்டசங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
திருமண வரவேற்பு விழா
திருமண வரவேற்பு விழா
நம்முடைய மாவட்டத்தலைவர் . தோழர்.கே.சந்திரசேகரன் அவர்களின் புதல்வி .செல்வி.C.தன்யா மற்றும் செல்வன் .P.R. விஜிஷ் ஆகியோரது திருமண வரவேற்பு விழா 10-01-2013 அன்று மாலை 06.00 மணி முதல் 09.00 வரை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரமண கவுண்டர் பூவாத்தாள் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள் மாவட்டத்தலைவர். தோழர்.கே.சந்திரசேகரன் அழைக்கின்றார். மணமக்கள் இருவருக்கும் மாவட்டச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் .
With extreme sorrow it is intimated that Com. Om Prakash Gupta, veteran leader of the P&T Trade Union movement and former Secretary General of NFPTE and NFTE, passed away at about 2100 hours on 6th Janaury 2013 in the Military Hospital, Delhi. He was admitted to the hospital two days back. The cremation will take place in the Delhi Lodhi Road Crematorium by 11.30 AM tomorrow (07-01-2013) as intimated by his son. BSNLEU express deep sorrow and convey heartfelt condolence to the bereaved family!
IDA Increased by 4.2% with effect from 01.01.2013. Total IDA is 71.5%
சிறப்புக்கூட்டம் :
அன்னல் அம்பேத்கர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டும், மாநிலச்செயற்குழு முடிவுகளை விளக்கியும் சிறப்புக்கூட்டம் திருப்பூர் கிளைகளின் சார்பில் நடைபெறுகிறது. தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்பீர் !
சிறப்புரை
தோழர்.A.பாபு ராதாகிருஷ்ணன், மாநில உதவிச்செயலர்
நாள் : 06-12-2012
கிழமை : வியாழன்
நேரம் : மாலை 05.00 மணி
இடம் : மெயின் LMR , திருப்பூர்
வருந்துகிறோம்
வருந்துகிறோம்
டெல்லியில் ஓடும் பேருந்தில் காட்டுமிராண்டிகளால் கும்பலாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணமடைந்தார் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த அந்த சகோதரிக்கு கோவைமாவட்டச்சங்கம் அஞ்சலியை செலுத்துகிறது. அதே போல அவரை இழந்து துடிக்கும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதற்கு எதிராக, டெல்லியிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்ட எழுச்சியை நம்மால் பார்க்க முடிந்தது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக நாமும் வலுவாக குரல் கொடுப்பதுதான் மறைந்த அந்த சகோதரிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
வரும் 29-12-2012 அன்று நமது அகில இந்திய பொதுச்செயலர். தோழர். அபிமன்யு கலந்து கொள்ளும் சிறப்புக்கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது. எனவே மாவட்ட,கிளைச்சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் திரளாக கலந்துகொள்ள மாவட்டச்சங்கம் கேட்டுக்கொள்கின்றது.
நமது மாவட்ட லோக்கல் கவுன்சில் கூட்டம் 26-12-2012 அன்று நடைபெறுகின்றது
வரும் 26-12-2012 அன்று வெண்மணி தியாகிகளுக்கு அனைத்து கிளைகளும் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது
பொள்ளாச்சியில் 22-12-2012 அன்று நடைபெற்ற கிளையின் பொதுக்குழுவில் 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். மற்றும் கிணத்துக்கடவு கிளையின் பொதுக்குழு 22-12-12 மாலை நடைபெற்றது 25க்கும் மேற்பட்ட தோழ்ர்கள் கலந்து கொண்டனர். இரண்டு பொதுக்குழுவிலும் மாவட்ட சங்க நிர்வாகி தோழர். தங்கமணி, மற்றும் தோழர்கள் பிரபாகரன், மனோகரன், சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
BSNL ஊழியர் சங்கம்
திருப்பூர் கிளைகள்
தோழர்.K.G. போஸ் நினைவு தினத்தை முன்னிட்டு
“ தபால் தந்தி இயக்க வரலாறு “
தொழிற்சங்க வகுப்பு
நாள் : 11-12-2012 , செவ்வாய் மாலை 04.30 மணி
இடம் : திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம்
பங்கேற்பு
தோழர் .K.மாரிமுத்து, மாநிலத்தலைவர்.
அனைவரும் வருக
செயலர்கள்
================================================================================
டெங்கு விழிப்புணர்வு முகாம்
நாள் : 11-12-2012 , செவ்வாய் மாலை 03.30 மணி
இடம் : திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம்
பங்கேற்பு : திரு. M.நசீர்,MBBS,MD
தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை,திருப்பூர்
அனைவரும் வருக
செயலர்கள்
78.2% IDA ஊதிய நிர்ணயம் தொடர்பாக DOT கேட்டுள்ள கேள்விகளுக்கான பதிலை BSNL நிர்வாகம் 15ந்தேதி DOTக்கு அனுப்பியுள்ளது.
இன்று(16-11-12) நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் நமது மாவட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கும்,ஆதரவு தெரிவித்த தோழர்களுக்கும் மாவட்டச்சங்கம் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
Dear Com, our strike will start within few hours..still management is adament.. culprit was not arrested still..We will teach them a lesson..by way of participating strike we will pay homage to Com.Sukvir paul singh..
தீபாவளி வாழ்த்துக்கள்
அன்று நரகசுரன் என்கின்ற அசுரனை கொன்று ஸ்ரீகிருஸ்ணர் உலகை காத்தார் என்பது பண்டைய வரலாறு. அதனால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இப்பொழு புதிய அசுரனாக உருவெடுத்துள்ள. அன்னிய முதலீடு, தனியார்மயம், ஊழல் வாதிகளின் அதிகார வர்க்கம் போன்ற மகாஅசுரர்களை உழைக்கும் வர்க்கம் என்ற புதிய அவதாரம் எடுத்து உலகை காப்போம். அனைவருக்கும் மாவட்டச்சங்கத்தின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மாவட்டச்செயலர் C.ராஜேந்திரன்
வாழ்த்துக்கள்
31-10-2012 அன்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கிளைமாநாட்டில் தோழர். ராசாராம், கிளைத்தலைவராகவும்,தோழர். சாகின் அகமது, கிளைச்செயலராகவும், தோழர்.செல்வராஜ் , கிளைப்பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
| நமது மாவட்டத்தில் TTA -வாக 27 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயிற்சி முடித்து அவர்களுக்கான இடங்களை நிரப்புவதற்காக வரும் 26-11-12 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகின்றது. அவர்களின் கலந்தாய்வு வெற்றிகரமாகவும், மகிழ்வாகவும் அமைய மாவட்டச்சங்கம் வாழ்த்துகின்றது.
கலந்தாய்வில் காலியாக உள்ள இடங்கள் 1. மந்திரிபாளையம் ( 1 இடம்) , 2) சோமனூர் (2 இடம்) 3. வீரபாண்டி ( 1 இடம்),4. சேவூர் ( 2 இரண்டு இடம்) , 5. தெக்கலூர்( 1 இடம்), 6. கருவலூர் ( 1 இடம்), 7. வீ.கள்ளிப்பாளையம் ( 1 இடம்), 8.பி.பி.புதூர். ( 3 இடம்), 9. வால்பாறை ( 1 இடம்), 10. காரமடை(1 இடம்), 11.கரடிவாவி (1 இடம்), 12.அவிநாசி( 2 இடம்), 13 கே.பி..புதூர்.( 1 இடம்), 14,பல்லடம்( இ இடம்). 15.வீ.வேலூர்.(1 இடம்), 16.இரும்பறை(1 இடம்),17. TX-OD-திருப்பூர்(1 இடம்), 18.திருப்பூர் CSC ( 1 இடம்), 19.பொங்கலூர்( 1 இடம்), 20. மேட்டுப்பாளையம்(1 இடம்), 21. அன்னூர்( 1 இடம்), 22. STR(( 1 இடம்),. மொத்தம் : 27 இடங்கள் தோழர்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்டச்சங்கம் கேட்டுக் கொள்கின்றது
வெற்றி பெற்ற தோழர்களின் பெயர்கள் 1) வெள்ளியங்கிரி சாமி 2)வெங்கிடேசன் 3)அழகர்சாமி 4) முத்துச்செல்வன், 5)மணி, 6)குணசேகரன், 7)வெள்ளியங்கிரி 8)விஷ்ணுகுமார், 9) சரவணண், 10)மகேந்திரன், 11)சம்பத்குமார் 11)இளஞ்செல்வன், 12)ஜீவா, 13)ரமேஸ், 15)கருணாநிதி 16)விஜயகுமார், 17)சின்னமாரியப்பன் , 18)ராஜன் 19)ஜெயபாலன், 20)சண்முகசுந்தரம், 21)கணகமணி 22)முருகனந்தம் , 23)மகேந்திரசாமி, 24)உமா சங்கர் 25)ரவிச்சந்திரன், 26)பார்த்தசாரதி, 27)ராமநரசன்
|
24-11-2012 அன்று சாய்பாபா காலனியில் நடைபெறும்
சாய்பாபா காலணி யின் கிளைச்செயலர் K.அன்பழகன் அவர்களின்
செல்வ புதல்வி அ.கார்த்திகாவினோதினி,, BBM(CA)
மற்றும் செல்வன் நாகராஜ், BA .
ஆகியோரின் திருமணவரவேற்பு நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெறவும்,
புது மண தம்பதியரின் மணவாழ்க்கை பல்லாண்டுகள்
மகிழ்ச்சியோடு அமையவும் மாவட்டச்சங்கம் மனதார வாழ்த்துகின்றது.
மாநில செயற்குழுக்கூட்டம் வரும் 29-11-2012 அன்று மாநிலத்தலைவர். தோழர். K. மாரிமுத்து தலைமையில் நடைபெறுகின்றது.. நமது பொதுச்செயலர். தோழர். P. அபிமன்யூ. அவர்கள் கலந்து கொள்கின்றார்.
ஆய்படு பொருள்
1).அகில இந்திய மாநாடு முடிவுகள் மற்றும் பரிசீலனைகள்
2) மாநில மாநாடு முடிவுகள் மற்றும் பரிசீலனைகள்
3)16-11-2012 வேலை நிறுத்தம் . – பரிசீலனை
4) UNITED FORUM & ASSOCIATION போராட்டங்கள் பரிசீலனை
5) 6- வது உறுப்பினர் சரிபார்ப்பு பரிசீலனை
6) மாநில அளவில் உள்ள பிரச்சனைகள்
| TM கேடருக்கான இலாகா போட்டித் தேர்வை நடத்த BSNL கார்ப்பரேட அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. |
மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக JTO கேடருக்கான இலாகா போட்டித் தேர்வையும் நடத்துவதற்கு BSNL கார்ப்பரேட் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது
வரும் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான - நிர்வாகம் முன் வைத்துள்ள புதிய விதிமுறைகள்
1. மொத்த வாக்குகளில்... எந்த சங்கம் 50% வாக்குகள் பெறுகிறதோ
அந்த ஒரு சங்கமே அங்கீகரிக்கப்பட்ட சங்கம் .
2. எந்த சங்கமும் 50%பெறவில்லை என்றால் ...35%சதம் 15%சதம் பெற்ற சங்கத்திற்கு மட்டும் அங்கீகாரம் .
3.35%சதம் கூட எந்த சங்கமும் பெறவில்லை என்றால்...15% வாக்குகள்
எந்த சங்கம் பெற்ற இரு சங்கங்களுக்கு சம நேர் அங்கீகாரம் .
4. 7% சத வாக்குகள் பெற்றிருந் தால் அந்த சங்கத்திற்கு சந்தா பி டித்தம் மற்றும் ஸ்பெஷல் casual விடுப்பு
5.குறைந்த பட்சம் 7சத வாக்குகளுக்கு மேல் பெறும்
சங்கத்திற்கு, குறைந்தபட்சம் சங்கத்திற்கு கவுன்சிலில் ஒரு சீட் !
6.அங்கீகாரம் இல்லாத சங்கங்களின் தலைவர்களை,
அங்கீகார சங்கத்தின் பெயரில் கவுன்சில்களுக்கு நியமனம்
செய்யப்படுவது ஏற்கபடாது.
7.இரண்டு ஆண்டுகளுக்கு பதில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்!
8.மத்திய,மாநில,மாவட்ட அளவில் சங்க நிர்வாகிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். (முறையே 21,15,9)
இது குறித்து 10 நாட்களுக்குள் தனது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று நிர்வாகம் சங்கங்களிடம் கேட்டுள்ளது.
லோக்கல் கவுன்சிலுக்கு கிளைச்செயலர்கள் கிளைப்பிரச்சனைகளை உடனடியாக தருமாறு மாவட்டச்சங்கம் கேட்டுக்கொள்கின்றது
சரவணம்பட்டி தொலைபேசி நிலையத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு இரண்டு பெண் தோழர்கள் உட்பட 12 பேருக்கு , தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளை அங்குள்ள துனைக்கோட்டப்பொறியாளர் திருமதி . பாரதி, அவர்கள் வழங்கியுள்ளார்.அவரின் இந்த சமூகச்சேவையை பாராட்டி நடந்த கூட்டத்தில் மாவட்டச்சங்கம் சார்பில் மாவ்ட்ட அமைப்புச்செயலர். தோழர்.ராஜசேகரன் , அவர்களை பாராட்டினார். மாவட்டச்சங்கத்தின் சார்பில் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்
செய்திகள்
| மத்திய சங்கம் JAO,AO பதவிகளுக்கு பட்டப்படிப்பு தகுதி என்ற அடிப்படை விதியை மாற்ற வேண்டும் என்றும் , பட்டப்படிப்பு முடிக்காதவர்களும் JAO தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் கடந்த ஜீன் மாதம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியது.அதை நிர்வாகம் ஏற்று JAO தேர்வு எழுத பட்டப்படிப்பு தேவையில்லை என்று உத்தரவு வெளியிட்டுள்ளது. மத்தியச்சங்கத்திற்கு நன்றி |
காசியபாத் மாவட்டச்செயலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்,படுகொலைக்கு காரணமான பொது மேலாளர் மற்றும் அவரின் அடியாட்களை கைது செய்யக்கோரியும்,சிபிசிஐடி விசாரனைக்கு உத்தரவிடக்கோரியும் இன்று ( 25-10-2012) உத்தரபிரதேசம்(மேற்கு) முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெறுகின்றது. மத்தியச்சங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநிலச்சங்க போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ITSஅதிகாரிகளை BSNL –ல் இணைப்பதை வலியுறுத்தி நாடுமுழுவதும் வரும் 29-10-2012 முதல் ஒருவார காலத்திற்கு நடைபெறும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தோழர்களும் எழுச்சியுடன் கலந்து கொள்ள மாவட்டச்சங்கம்கேட்டுக்கொள்கின்றது.
ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 01-11-12 ஆம் தேதி அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து தோழர்களும் கலந்து கொள்ள மாவட்டச்சங்கம் கேட்டுக்கொள்கின்றது
| ஸ்காலர்சிப் பெற புதியதாக விண்ணப்பித்தல் மற்றும் புதிப்பிற்க கடைசி தேதி 30-11-2012 |
..
| செய்திகள் நமது மாநிலச்சங்கம் O/D STAFF களுக்கு வழங்கியது போல அனைத்து ஊழியர்களுக்கும் புதிய சிம்களை இலவசமாக வழங்க வேண்டும் என மாநில கவுன்சிலில் வலியுறுத்தியது. நிர்வாகம் நமது கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக 30 % ஊழியர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி நமது மாவட்டத்தில் பணியில் உள்ள மூத்த ஊழியர்களுக்கும் இலவச சிம்கள் விரைவில் வழங்க்கப்படும் |
திருப்பூரில் மீண்டும் தொழிற்சங்க மையம் 16-10-2012 அன்று மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது
மத்தியச்சங்க செய்திகள்
UNITED FORUM அறைகூவலின்படி பின்வரும் கோரிக்களை வலியுறுத்தி வரும் 9 ம் தேதி மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறும் . தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள மாவட்டச்சங்கம் கேட்டுக்கொள்கிறது. கிளைச்செயலர்கள் பெருவாரியான தோழர்களை போராட்டத்தில் பங்கேற்க செய்யுமாறு மாவட்டச்சங்கம் கேட்டுக்கொள்கிறது கோரிக்கைகள் · குறைந்தபட்ச உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையினை கூடிய (PLI) அனைத்து BSNL ஊழியர்களுக்கும் வழங்கு . · அதிகம் அதிகாரம் படைத்த மத்திய அமைச்சரவைக்குழு பரிந்த்துரைத்த கூடுதல் 2G கட்டணம் கட்டுவதில் இருந்து விலக்கு வேண்டும் · காப்பீட்டுத்துறையில் 49 % மற்றும் பென்ஷன் துறையில் 49 % சதவிகிதம் அந்நியமுதலீட்டை அனுமதிக்கும் மத்திய அமைச்சரவையின் முடிவை திரும்ப வலியுறுத்தி
UNION BANK OF INDIA –வில் நமது MOU முடிந்தது. மீண்டும் புதிப்பிக்க நமது பொதுச்செயலர் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்
கண்ணீர் அஞ்சலி காசியபாத் மாவட்டச்செயலர்.தோழர்.சுகேந்திர பால் சிங் இன்று அகால மரணம் அடைந்தார். காசியபாத் மாவட்டப்பொதுமேலாளர் மற்றும் அவரின் அடியாட்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார்.தோழரின் மறைவிற்கு நமது மத்திய சங்கமும்,மாநிலசங்கமும், மாவ்ட்டச்சங்கமும் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. தோழரின் மரணத்திற்கு காரணமான காசியபாத் மாவட்டப்பொதுமேலாளர் மற்றும் அவரின் அடியாட்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட நமது மத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. தோழர்கள் அதுசமயம் நாளை 23-10-2012 அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட மாவட்டச்சங்கம் கேட்டுக்கொள்கிறது
17.4.13
25.7.12
தீண்டாமை ஒழிப்பு முன்னணி க்கு நன்கொடை

5.7.12





2.7.12
வாழ்த்துக்கள்
பல்லடத்தில் நடைபெற்ற நமது மாவட்ட மாநாட்டில் பல தோழர்கள் கவுரவிக்கப்பட்டனர். அதில் குறிப்பாக நமது சங்கத்தில் எவ்வித பொறுப்பும் இல்லாமல் சங்கப்பணிகளில் திறம்பட தன்னை ஈடுபடுத்திக்கொண்ட தோழர். புருசோத்தமன் , RM , கோவை மெயின் தொலைபேசி நிலையம் , அவர்களுக்கு நமது மாநிலச்செயலரும், மாநிலத்தலைவரும் சேர்ந்து பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்கள்.