தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

பல்லடம் கோட்டப்பொறியாளருடன் சந்திப்பு



மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தலமட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அடிப்படையில்  தற்பொழுது பல பகுதிகளில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது
18-09-2014 அன்று பல்லடம் கோட்டப்பொறியாளர். திரு.ஆறுமுகம் அவர்களை   மாநில சங்க நிர்வாகிகள் .தோழர்கள்.எஸ்,சுப்பிரமணியம், எ.முகமது ஜாபர், மாவட்ட சங்க நிர்வாகிகள்  தோழர்கள் எம்.முருகசாமி, செள.மகேஸ்வரன், கல்யாணராமன், மற்றும் பல்லடம் கிளைச்செயலர். தோழர்.நாகராஜன் ஆகியோர் சந்தித்து பேசினார்
அப்பொழுது ஊழியர்கள் இடமாறுதல்கள் விடுவிப்பு, மற்றும் சேவையை மேம்படுத்துவது, ஊழியர்களின் பிரச்சனைகள் ஆகியவைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. விரைவில் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக பல்லடம் கோட்டப்பொறியாளர். திரு.ஆறுமுகம்  உறுதிஅளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக