தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 28 நவம்பர், 2014

பத்திரிக்கை செய்திகள்

தீக்கதிர் செய்தி
 
பிஎஸ்என்எல் நிறுவனத்தை படிப்படியாக ஒழித்துக்கட்ட முனைந்துள்ள மத்திய பாஜக அரசின் கொள்கைகளைக் கண்டித்தும் ஊழியர்களின் பிரச்சனைகள் உட்பட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். தமிழகத்தில் மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்கள் சுமார்15 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அனைத்து பகுதிகளிலும் பிஎஸ்என்எல் அலுவலகங்களில் பணிகள் ஸ்தம்பித்தன. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழுவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் மாநிலத் தலைவர் எஸ்.செல்லப்பா மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாநில பொதுச் செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையேற் றனர்.
மத்திய அரசு, பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீர்குலைக்கும் தனது கொள்கைகளை கைவிடாவிட் டால் போராட்டம் மேலும்தீவிரமடையும் என தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.




தமிழ்முரசு செய்தி
சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைதல், நிறுத்தப்பட்ட மருத்துவ படியை வழங்குதல் உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள  பிஎஸ்என்எல்  ஊழியர்கள் இன்று அதிகாலை 12 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை  உள்ளடக்கிய சென்னை தொலைபேசியில் பணியாற்றும் ஊழியர்கள், இதர மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் பணியாற்றும்   ஊழியர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 86 ஆயிரம் 3, 4ம் நிலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  இணைப்பகங்களில் மின்னணு, மின்சார பிரிவில் இருக்கும் ஊழியர்களும், அதிகாரிகளின் செயலாளர்கள், உதவியாளர்களாக இருப்பவர்கள் மட்டுமே வேலை செய்ய  அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை தவிர வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத முதல், இரண்டாம் நிலை அதிகாரிகள் பணிக்கு வந்திருந்தனர். அதேநேரத்தில் அதிகாரிகளுக்கான சங்கங்களின்  நிர்வாகிகள் பலர் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று வேலைக்கு வரவில்லை. 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வேலை  நிறுத்தத்தில் பங்கேற்றதால் சென்னையில் உள்ள தொலைபேசி இணைப்பகங்கள், அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பணிகளும் பாதிக்கப்பட்டன. ß-நன்றி----------
தமிழ்முரசு ............>

தினமணி
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வாடிக்கையாளர் சேவை பாதிப்பு
பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின.
தனியாருக்கு பி.எஸ்.என்.எல். பங்குகளை விற்க முடிவு, போனஸ் வழங்காதது, எஸ்.சி.,எஸ்.டி. ஊழியர்களுக்கான சலுகைகள் குறைப்பு, பதவி உயர்வில் தாமதம், புதிய ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடு போன்ற 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் வியாழக்கிழமை பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில், சென்னை, தமிழக தொலைபேசி வட்டத்தைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
மேலும், தொலைபேசி பழுது நீக்கம், "ப்ரீபெய்டு ரீசார்ஜ்' செய்யும் பணி, செல்பேசி, இணையதள சேவைகளுக்கான கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல பணிகள் பாதிப்புக்குள்ளானது.
ஒரு நாள் வேலை நிறுத்தம் என்பதால், செல்பேசி, இணையதள சேவை பாதிப்புக்குள்ளாகவில்லை. மாறாக, தரைவழி தொலைபேசி சேவை பழுது நீக்கும் பணி முற்றிலும் முடங்கியதாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தெரிவித்தனர்.
 சம்பள தேக்கம், கருணை அடிப்படையிலான வேலை. எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களுக்கான சலுகைகள், பதவி உயர்வு, புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கான சம்பள முரண்பாடு உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி, பி.எஸ்.என்.எல். தலைவருக்கு கடந்த மே மாதம் 26-ந்தேதி மனு கொடுத்தோம்.
அதன்பின்னர், ஜூன் மாதம் 27-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சில கோரிக்கைகளை தீர்த்து வைக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 25-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்த பேச்சுவார்த்தையில் போதிய பணம் இருப்பு இல்லை என்று கூறுகிறார்கள். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பணம் ஒரு பொருட்டு இல்லை. தொடர்ந்து இவர்கள் அலட்சியம் செய்வதால், ஊழியர்களுக்கு நிறைவேற்றி தர வேண்டிய 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (அதாவது நேற்று) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.
25 ஆயிரம் பேர்
இதற்கு பிறகும், நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் ஊழியர்களும், சென்னையில் 10 ஆயிரம் ஊழியர்களும் பணிக்கு செல்லவில்லை.
ஆனால் அந்தந்த அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் மட்டும் பணிக்கு சென்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையங்கள், வாடிக்கையாளர்கள் சேவை மையங்கள், நிர்வாக அலுவலகங்கள் ஊழியர்கள் யாரும் வேலைக்கு செல்லாததால் வெறிச்சோடின.
இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்: வாடிக்கையாளர்கள் சேவை பாதிப்பு
சென்னை, நவ. 27–
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 4 வருடமாக போனஸ் மறுப்பு, கடை நிலை ஊழியர்கள் ஊதியம் தேக்கம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் சென்னை தொலைபேசி மற்றும் தமிழ்நாடு வட்டாரம் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் கலந்து கொண்டனர்.
ஊழியர்களின் போராட்டத்தால் வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்கப்பட்டன. சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊழியர்கள் பணிக்கு வராததால் டெலிபோன் பழுது, ரீசார்ஜ் செய்யும் பணி, கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல பணிகள் பாதிக்கப்பட்டன.
பி.எஸ்.என்.எல் கூட்டு போராட்டகுழு தலைவர் மதிவாணன் தலைமையில் பூக்கடை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தால் செல்போன் சேவை, இணைய தள சேவை பாதிக்காது. தரைவழி டெலிபோன் மட்டும் பழுது பணி முற்றிலும் பாதிக்கப்பட்டன.

 


 
சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைதல், நிறுத்தப்பட்ட மருத்துவ படியை வழங்குதல் உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள  பிஎஸ்என்எல்  ஊழியர்கள் இன்று அதிகாலை 12 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை  உள்ளடக்கிய சென்னை தொலைபேசியில் பணியாற்றும் ஊழியர்கள், இதர மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் பணியாற்றும்   ஊழியர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 86 ஆயிரம் 3, 4ம் நிலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  இணைப்பகங்களில் மின்னணு, மின்சார பிரிவில் இருக்கும் ஊழியர்களும், அதிகாரிகளின் செயலாளர்கள், உதவியாளர்களாக இருப்பவர்கள் மட்டுமே வேலை செய்ய  அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை தவிர வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத முதல், இரண்டாம் நிலை அதிகாரிகள் பணிக்கு வந்திருந்தனர். அதேநேரத்தில் அதிகாரிகளுக்கான சங்கங்களின்  நிர்வாகிகள் பலர் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று வேலைக்கு வரவில்லை.கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள்  ஒவ்வொரு இணைப்பகம், அலுவலகம், வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஆகியவற்றின் வாசலில் நின்றுக் கொண்டு வேலைக்கு வந்த சிலரை திருப்பி அனுப்பினர்.  அதேபோல் கையெழுத்து போட்டு விட்டு வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வந்தவர்களையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.  90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வேலை  நிறுத்தத்தில் பங்கேற்றதால் சென்னையில் உள்ள தொலைபேசி இணைப்பகங்கள், அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பணிகளும் பாதிக்கப்பட்டன. - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=66514#sthash.WWGq0fnN.dpuf
சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைதல், நிறுத்தப்பட்ட மருத்துவ படியை வழங்குதல் உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள  பிஎஸ்என்எல்  ஊழியர்கள் இன்று அதிகாலை 12 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை  உள்ளடக்கிய சென்னை தொலைபேசியில் பணியாற்றும் ஊழியர்கள், இதர மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் பணியாற்றும்   ஊழியர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 86 ஆயிரம் 3, 4ம் நிலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  இணைப்பகங்களில் மின்னணு, மின்சார பிரிவில் இருக்கும் ஊழியர்களும், அதிகாரிகளின் செயலாளர்கள், உதவியாளர்களாக இருப்பவர்கள் மட்டுமே வேலை செய்ய  அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை தவிர வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத முதல், இரண்டாம் நிலை அதிகாரிகள் பணிக்கு வந்திருந்தனர். அதேநேரத்தில் அதிகாரிகளுக்கான சங்கங்களின்  நிர்வாகிகள் பலர் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று வேலைக்கு வரவில்லை.கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள்  ஒவ்வொரு இணைப்பகம், அலுவலகம், வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஆகியவற்றின் வாசலில் நின்றுக் கொண்டு வேலைக்கு வந்த சிலரை திருப்பி அனுப்பினர்.  அதேபோல் கையெழுத்து போட்டு விட்டு வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வந்தவர்களையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.  90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வேலை  நிறுத்தத்தில் பங்கேற்றதால் சென்னையில் உள்ள தொலைபேசி இணைப்பகங்கள், அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பணிகளும் பாதிக்கப்பட்டன. - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=66514#sthash.WWGq0fnN.dpuf
சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைதல், நிறுத்தப்பட்ட மருத்துவ படியை வழங்குதல் உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள  பிஎஸ்என்எல்  ஊழியர்கள் இன்று அதிகாலை 12 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை  உள்ளடக்கிய சென்னை தொலைபேசியில் பணியாற்றும் ஊழியர்கள், இதர மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் பணியாற்றும்   ஊழியர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 86 ஆயிரம் 3, 4ம் நிலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  இணைப்பகங்களில் மின்னணு, மின்சார பிரிவில் இருக்கும் ஊழியர்களும், அதிகாரிகளின் செயலாளர்கள், உதவியாளர்களாக இருப்பவர்கள் மட்டுமே வேலை செய்ய  அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை தவிர வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத முதல், இரண்டாம் நிலை அதிகாரிகள் பணிக்கு வந்திருந்தனர். அதேநேரத்தில் அதிகாரிகளுக்கான சங்கங்களின்  நிர்வாகிகள் பலர் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று வேலைக்கு வரவில்லை.கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள்  ஒவ்வொரு இணைப்பகம், அலுவலகம், வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஆகியவற்றின் வாசலில் நின்றுக் கொண்டு வேலைக்கு வந்த சிலரை திருப்பி அனுப்பினர்.  அதேபோல் கையெழுத்து போட்டு விட்டு வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வந்தவர்களையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.  90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வேலை  நிறுத்தத்தில் பங்கேற்றதால் சென்னையில் உள்ள தொலைபேசி இணைப்பகங்கள், அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பணிகளும் பாதிக்கப்பட்டன. - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=66514#sthash.WWGq0fnN.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக