தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 17 டிசம்பர், 2014

பிஎஸ்என்எல்-ஐ பாதுகாக்க ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் திருப்பூரில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்

பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க ஒரு கோடி பொது மக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூரில் கே.தங்கவேல் எம்எல்ஏ கையெழுத்திட்டு இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்பதற்கு, தேவையான செல்பேசி சேவை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க வேண்டும், 4 ஜி சேவை வழங்கவும், மக்களுக்கு அளிக்கும் சேவையை மேம்படுத்தவும் மத்திய அரசு முட்டுக்கட்டையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற்று பிப்ரவரி மாதம் டில்லியில் மாபெரும் பேரணி நடத்தி மத்திய அரசிடம் வழங்க பிஎஸ்என்எல் அனைத்து சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
அதன்படி திருப்பூர் மெயின் தொலைபேசி நிலைய வளாகத்தில் செவ்வாயன்று கையெழுத்துப் பெறும் இயக்கம் தொடங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு எம்.எல்..வுமான கே.தங்கவேல் முதல் கையெழுத்திட்டு இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக என்எப்டிஇ தலைவர் அந்தோணி மரியபிரகாஷ் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் அண்ணாதுரை கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கே.தங்கவேல் எம்எல்ஏ பேசும்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாக்கும் கோரிக்கையை ஊழியர்கள் மட்டும் போராடி வெற்றி பெற முடியாது, இதர தொழிற்சங்கங்கள், ஜனநாயக அமைப்புகள், விரிவான மக்களின் ஆதரவைப் பெற்று ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம்தான் இந்த பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க முடியும். அதற்கு கையெழுத்து இயக்கம் வெற்றிகரமாக நடத்த வாழ்த்துத் தெரிவித்தார்.

இதில் அனைத்து சங்க ஊழியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக எப்என்டிஓ செயலாளர் தனபதி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக