தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 19 டிசம்பர், 2014

கையெழுத்து இயக்கம்



பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க ஒரு கோடி பொது மக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை டெலிகாம் பில்டிங் பகுதியில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். தோழர்.பி.ஆர். நடராஜன்  அவர்கள்  கையெழுத்திட்டு இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாக்கும் கோரிக்கையை ஊழியர்கள் மட்டும் போராடி வெற்றி பெற முடியாது, இதர தொழிற்சங்கங்கள், ஜனநாயக அமைப்புகள், விரிவான மக்களின் ஆதரவைப் பெற்று ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம்தான் இந்த பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க முடியும். அதற்கு கையெழுத்து இயக்கம் வெற்றிகரமாக நடத்த வாழ்த்துத் தெரிவித்தார்.

இதில் அனைத்து சங்க ஊழியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக