தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 20 மே, 2015

கோரிக்கைகள் வேடிக்கை அல்ல ! போராட்டங்கள் விளையாட்டு அல்ல !



பொங்கி எழுவோம் ! புறப்படு தோழா ! 
கோவை மாவட்ட நிர்வாகம் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு இடத்தை ஒதுக்கீ தந்துள்ளது.  பெருந்தன்மையை பாராட்டுகிறோம். வழக்கம் போல இன்று மாலை சாதாரனமான ஒரு கடிதத்தை தந்துள்ளது. மார்ச் 16 லிலும் , ஏப்ரல் 25 லிலும் விபரமான கடிதத்தில் தந்து விட்டதாம் . அதாவது இரண்டு மாதத்திற்கு முன்னால் தரப்பட்ட ஒரு கடிதத்தையும் கடந்த மாதம் நம்முடைய மாநில பொறுப்பாளர்களின் சந்திப்பிற்கு பின் தந்த கடிதத்தையும் மேற்கோள் காட்டியுள்ளது. ஒரு மாத காலம் ரூம் போட்டு ஆலோசனை செய்து  EOI  யில் பணிபுரியும் அனைவரையும் நிறுத்துவது  என்ற அரக்கத்தனமான முடிவை அமலாக்க துவங்கியுள்ளது.சாதரண ஊழியர்களின் 15 நாள் ஊதியத்தை விழுங்கி மகிழ்ச்சி ஏப்பம் விடுகின்றது. இதை எப்படி  வர்ணிப்பது என்று வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கின்றோம்.நாகரீகம் கருதியே சொல்ல  வேண்டிய கருத்துக்களை இந்த இடத்தில் தவிர்த்து இருக்கின்றோம். இது புரிபவர்களுக்கு புரியும்  மேலும் புரிய வைக்க நாளை கோவை டெலிகாம் பில்டிங்கில் சங்கமிப்போம் . புதிய சரித்தரம் படைக்க புறப்படு தோழா !



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக