தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 12 நவம்பர், 2021

BSNL ஊழியர்களை கட்டாயமாக கழிப்பிடங்களை சுத்தம் செய்ய, கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் வெளியிட்டுள்ளது

 .ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை, BSNL ஊழியர்கள், கட்டாயமாக சுத்தம் செய்யும் பணிகளை செய்ய வேண்டும் என, DoTயின் வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி, கார்ப்பரேட் அலுவலகம் இன்று(12.11.2021) கடிதம் வெளியிட்டுள்ளது. அதில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளும் அடங்கும். மேலும் டெல்லியில் உள்ள BSNL அலுவலகங்களில் சுத்தம் செய்யும் பணிகளை மத்திய தொலை தொடர்பு அமைச்சர் பரிசோதனை செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது ஊழியர்களை கேவலப்படுத்தும் செயலாகும். இந்தக் கடிதத்திற்கு BSNL ஊழியர் சங்கம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. சுத்தம் செய்யும் பணிகளை செய்ய நிர்வாகம், ஊழியர்களை கட்டாயப்படுத்த முடியாது.


 தோழர் P.அபிமன்யு 

 பொதுச்செயலாளர்

அனைத்து தொழிற்சங்க சிறப்பு மாநாட்டு பிரகடனம் !!!

 

🔻🟣🔺🔴✅🔻🟣🔴🔻🟣✅

இன்று(11.11.2021) நடைபெற்ற BMS நீங்கலாக அனைத்து தொழிற்சங்கங்களின் சிறப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் :: 


♻️ கோரிக்கைகள் 10. 


♻️ 26.11.2021 *பெருந்திரள் ஆர்ப்பாட்டம். 


♻️ நவம்பர்- டிசம்பர் 2021 - மாநில அளவிலான சிறப்பு மாநாடுகள். 


♻️ டிசம்பர்- ஜனவரி 2022 - பிரச்சார இயக்கங்கள்/கையெழுத்து இயக்கம். 


♻️ ஜனவரி 2022 மத்தியில் ஆர்ப்பாட்டம், பேரணி, ஊழியர் கூட்டங்கள்! 


♻️ பிப்ரவரி 2022 பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம்.!

2022, பிப்ரவரியில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடத்திட தொழிலாளர்களின் தேசிய கருத்தரங்கம் முடிவு

 புதுடெல்லி ஜந்தர் மந்தரில், இன்று (11.11.2021) தொழிலாளர்களின் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.  கொரோனா பெருந்தொற்று தடையின் காரணமாக, அளவான பங்கேற்பாளர்களுடன் நடைபெற்ற இந்த கருத்தரங்கை, 10 மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்களும் கூட்டாக தலைமையேற்று நடத்தினர்.  தோழர் அஷோக் சிங் (INTUC), தோழர் அமர்ஜித் கவுர் (AITUC), தோழர் H.S.சித்து (HMS), தோழர் தபன் சென் (CITU) உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் பொதுச்செயலர்களும், தலைவர்களும், இந்த கருத்தரங்கத்தில் உரை நிகழ்த்தினர்.


இந்த கருத்தரங்கில் உரையாற்றிய தலைவர்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல், தேசிய பணமாக்கல் திட்டம், புதிய தொழிலாளர் குறியீடுகள், கார்ப்பரேடுகளுக்கு ஆதரவான விவசாய சட்டங்கள், ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் மீதான தாக்குதல்களை கடுமையாக விமர்சித்தனர். 


விவசாயிகளின் போராட்டம் ஓராண்டு நிறைவு பெறுவதை ஒட்டி, 2021, நவம்பர் 26ஆம் தேதி ஆர்ப்பாட்டங்களை நடத்திட, இந்த கருத்தரங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.  


மேலும், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் 2022, பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட, மாநில அளவில் இணைந்த கருத்தரங்கங்கள் நடத்திடவும், பொதுத்துறை நிறுவன தொழிற்சங்கங்களின் இணைந்த கூட்டங்களை நடத்தவும், அனைத்து தொழிலாளர்களையும் சென்று சேரும் வண்ணம் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட வேண்டுமென்றும் இந்த கருத்தரங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.


 -தோழர் P.அபிமன்யு 

 பொதுச்செயலாளர்

வியாழன், 11 நவம்பர், 2021

ஊதிய மாற்ற பேச்சு வார்த்தைக் குழுவின் கூட்டம் 18.11.2021 அன்று நடைபெறும்

 மாற்றியமைக்கப்பட்ட ஊதிய மாற்ற பேச்சு வார்த்தைக் குழுவின் கூட்டம் 18.11.2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என கார்ப்பரேட் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்தக் குழுவில் உள்ள BSNL ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் தவறாமல், பங்கேற்க வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.


 -தோழர் P.அபிமன்யு 

 பொதுச்செயலாளர்

புதன், 10 நவம்பர், 2021

ஊதிய மாற்றத்திற்கு பேச்சு வார்த்தை நடத்துவதற்கான குழு

 அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கு பேச்சு வார்த்தை நடத்துவதற்கான குழு மாற்றியமைக்கப்பட்டு விட்டது .


27.10.2021 அன்று AUAB தலைவர்கள் மற்றும் CMD BSNL ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில், ஊதிய பேச்சு வார்த்தைக்குழு மாற்றியமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இன்று (10.11.2021), அதற்கான உத்தரவை கார்ப்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு வெளியிட்டுள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் பட்டியலில், கேரள மாநில செயலர் தோழர் C.சந்தோஷ் குமார் இணைக்கப்பட்டுள்ளார்.


ஊதிய பேச்சு வார்த்தைக் குழு மாற்றியமைக்கப் பட்ட நிகழ்வு, ஊதிய பேச்சு வார்த்தையில் ஏற்பட்டிருந்த முட்டுக்கட்டையை நீக்கியுள்ளது. இது AUAB தலைமையில் ஒன்று பட்டு செயல்பட்ட அனைத்து சங்கங்களின் மாபெரும் வெற்றி.


 -தோழர் P.அபிமன்யு 

 பொதுச்செயலாளர்

செவ்வாய், 9 நவம்பர், 2021

தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிரான சுற்றறிக்கை

 

தேசிய பணமாக்கல் திட்டத்ஹ்டிற்கு எதிராக BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF ஆகிய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஒரு சுற்றறிக்கையை தயாரித்து ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. அதனது தமிழாக்கத்தை தமிழ் மாநில சங்கம் இத்துடன் இணைத்துள்ளது. அதனை அனைத்து பகுதி ஊழியர்களிடமும் கொண்டு செல்ல வேண்டுமென நமது மத்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த மொழியாக்கம் செய்யப்பட்ட சுற்றறிக்கையினை நமது மாவட்ட/ கிளை சங்கங்கள், அனைத்து ஊழியர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

செள.மகேஸ்வரன் 

மாவட்ட செயலர்

நினைவூட்டல் :

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  தோழர்களே, 

22.10.2021 அன்று நடைபெற்ற BSNLEU , TNTCWU இணைந்த செயற்குழுவில் சங்கத்தின்  உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை 25.10.2021 முதல் 10.11.2021வரை நடத்தி முடிக்க வேண்டும் என்று  ஒருமனதாக  முடிவு செய்திருந்தோம். உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாக  மாவட்டங்களில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது..

என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது..

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒப்பந்தகாரர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு விட்டதா..

மொத்த ஒப்பந்த தொழிலாள்ர்களின் பெயர்களும்  அவர்களுடைய பணி விவரங்களையும் சேகரிக்கப்பட்டு விட்டதா..

 இதுவரை எத்தனை உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாவட்ட  செய்லர்கள் உடனே    மாநிலச் சங்கத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உறுப்பினர் படிவத்தின் ஒரு  நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்..


தோழமையுடன்


A. பாபுராதாகிருஷ்ணன்     

மாநிலச் செய்லர்

BSNLEU


C. வினோத்குமார்

மாநிலச் செய்லர்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

தொழிற்சங்கம் என்ற பெயரில் கேளிக்கை விடுதிகளை நடத்துபவர்கள், இதற்கு மேல் BSNL ஊழியர் சங்கத்தை கேலி செய்ய முடியாது

 கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற IDA முடக்க வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், அதன் தீர்ப்பு BSNL ஊழியர் சங்கத்திற்கு சாதகமாகவே வரும் என்பதை அரசு உதவி தலைமை வழக்கறிஞர் புரிந்துக் கொண்டார். எனவே, அவருடைய வழிகாட்டுதல் அடிப்படையில், IDA முடக்கம் ஊழியர்களுக்கு பொருந்தாது என DPE ஒரு விளக்கத்தை வெளியிட்டது. நீதிமன்ற வழக்கின் மூலம் BSNL ஊழியர் சங்கம் கொடுத்த நிர்பந்தத்தின் காரணமாகவே DPE இந்த உத்தரவை வெளியிட்டது என BSNL ஊழியர் சங்கம் கூறியது.

அதற்கு, தொழிற்சங்கம் என்ற பெயரில் கேளிக்கை விடுதி நடத்தும் சில தலைவர்கள், WhatsApp செய்திகள் மூலம் BSNL ஊழியர் சங்கத்தை கேலி செய்திருந்தனர். ஆனால் தற்போது, ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து உறுதியாக போராடும் பாதுகாவலன், BSNL ஊழியர் சங்கம் தான் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சனி, 20 பிப்ரவரி, 2021

கேரள மாநில BSNL ஊழியர் சங்கத்தையும் வழக்கறிஞர் திரு V.V.சுரேஷ் அவர்களையும் BSNL ஊழியர் சங்கம் பாராட்டுகிறது

 IDA முடக்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்வது என BSNL ஊழியர் சங்கம் முடிவெடுத்தவுடன், அதனை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது என முடிவு செய்தது. ஏற்கனவே, FACT தொழிலாளர் சங்கம் தொடுத்திருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பை கேரள உயர் நீதிமன்றம் வழங்கியிருந்ததே இந்த முடிவிற்கு காரணம். ஒரு சில காரணங்களுக்காக, கேரள மாநில BSNL ஊழியர் சங்கத்தின் மூலமாக, இந்த வழக்கு தொடரப்பட்டது.

இதற்காக மிகச்சிறந்த வழக்கறிஞரை ஏற்பாடு செய்ததன் மூலம், கேரள மாநில சங்கமும், அதன் மாநில செயலர் தோழர் C.சந்தோஷ் குமாரும் மிகச் சிறந்த பணியினை செய்துள்ளனர். கேரள மாநில சங்கம் எடுத்த விரைவான நடவடிக்கைகள் காரணமாக ஒட்டு மொத்த BSNL ஊழியர்களுக்கும் நிவாரணம் கிடைத்துள்ளது.

கேரள மாநில சங்கத்தையும் அதன் மாநில செயலர் சந்தோஷ் குமாரையும் மத்திய சங்கமும், தமிழ் மாநில சங்கமும் , கோவை மாவட்ட சங்கமும் மனதார வாழ்த்துகின்றன. அதே போன்று, இந்த சிறப்பான உத்தரவை பெற்று தந்த வழக்கறிஞர் திரு V.V. சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றன.

ஊழியர்களுக்கு IDAவை வழங்க வேண்டும் என்கிற தெளிவான வழிகட்டுதலை கேரள உயர் நீதிமன்றம், DPEக்கு வழங்கி உள்ளது

 ஊழியர்களுக்கு IDAவை முடக்கும் முயற்சியை BSNL ஊழியர் சங்கம் தடுத்து நிறுத்தி விட்டது. IDAவை முடக்கும் DPEயின் உத்தரவு, அதிகாரிகளுக்கும், சங்கம் சாராத மேற்பார்வையாளர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என கேரள உயர் நீதி மன்றம், DPEக்கு கூறியுள்ளது. எனவே ஊழியர்களுக்கு IDA வழங்குவதை மறுக்கக் கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. ஊழியர்களுக்கு IDA வழங்குவதற்கான உத்தரவை DPE வழங்க வேண்டும் என்பதே DPEக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள தெளிவான வழிகாட்டுதல்.

இந்த நீதிமன்ற உத்தரவிற்கு பின், ஊழியர்களுக்கு IDA வழங்குவதற்கான உத்தரவை வெளியிடாமல், DPE சாக்கு போக்கு சொல்ல வழியில்லை

லோக்கல் கவுன்சில் விவாதப்பொருட்கள் அறிக்கை எண் 3

  BSNL ஊழியர் சங்கம்

                                  கோவை மாவட்டம்       

அறிக்கை எண் 3                                                         தேதி:20-02-2021

லோக்கல் கவுன்சில் விவாதப்பொருட்கள்

தோழர்களே வணக்கம் ,

             நமது மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு லோக்கல் கவுன்சில்  கூட்டத்தை மார்ச் 2 வது வாரம்  நடத்த நமது நிர்வாகம் திட்டமிட்டுள்ளது . கடந்த கவுன்சில் கூட்டம் 2019 ஏப்ரலில் நடைபெற்றது. சுமார் 2 ஆண்டுகளுக்குபிறகு நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் ஊழியர் தரப்பு பிரச்சனைகளை வரும் பிப்ரவரி 25 க்குள்  கிளைச்செயலர்கள் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் ஊழியர்களிடம் பெற்று மாவட்ட சங்கத்திடம் விபரமாக எழுத்துபூர்வமாக அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்காக மாவட்ட சங்க நிர்வாகிகள் கிளைகளுக்கு சென்று விபரங்களை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

         கிளைச்செயலர்கள் ஊழியர் தரப்பு பிரச்சனைகள் , சேவை மேம்பாடுகள் பற்றிய பிரச்சனைகள் , தல மட்ட பிரச்சனைகள் , செலவீனங்களை குறைப்பது, ஊழியர் குடியிருப்பு பிரச்சனைகள் , என விபரமாக அளிக்க வேண்டும் .கிளைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட சங்க நிர்வாகிகள் விபரம் வருமாறு

PGMO

C.சசிக்குமரன்,S.சரத்கங்கா,யாக்கூப் ஹிசைன்LJCM

DE செண்ட்ரல்

M.முருகன்,பி.ரகுநாதன்

பீளமேடு

A.Y.அப்துல் முத்தலீப்,

பொள்ளாச்சி

V.விஜேஸ்வரி,S.மனோகரன்

உடுமலை

A.சின்னான், பாபு LJCM

திருப்பூர் மெயின்

P.கல்யாணராமன்,G.ராஜராஜன்,T.முருகானந்தம்,

திருப்பூர் EXTL

C.முருகானந்தன்,J.அருண்குமார்,இளஞ்செல்வன் LJCM

மேட்டுப்பாளையம்

V.சந்திரசேகரன்,R.ரகுநாதன்

குறிச்சி

K.லோகநாதன் ,

டெலிகாம் பில்டிங்

B.சரவணகுமார்,

கணபதி

A.சாஹீன் அகமது,

நேரம் குறைவு எனவே உடனடியாக கிளைச்செயலர்,மாவட்ட சங்க நிர்வாகிகள்  உறுப்பினர்களிடம் ஆலோசித்து குறித்த காலத்திற்குள் மாவட்ட சங்கத்திடம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஊழியர் குடியிருப்பு பிரச்சனைகளுக்கு திருப்பூர் J.அருண்குமார், உடுமலை- பாபு, பொள்ளாச்சி- S.மனோகரன், கோவை -தோழர்.சரவணகுமார்,மேட்டுப்பாளையம் -. வி.சந்திரசேகரன் ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டுகிறோம்

 தோழமை வாழ்த்துக்களுடன்

 செள.மகேஸ்வரன்

மாவட்ட செயலர்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

IDA முடக்கத்திற்கு எதிரான BSNL ஊழியர் சங்கத்தின் வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

 BSNL ஊழியர்களுக்கு மூன்று தவணை IDA முடக்கத்திற்கு எதிராக BSNL ஊழியர் சங்கம் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

IDA முடக்கம், அதிகாரிகளுக்கும், சங்கம் சாராத மேற்பார்வையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் கேரள உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும், மனு தாக்கல் செய்துள்ள சங்கத்தின் உறுப்பினர்களுக்கு IDA மறுக்கப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

தற்போது, BSNL ஊழியர்களுக்கு IDA தவணைகளை வழங்குவதை தவிர, அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை. நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன், நமது மத்திய சங்கம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.

உறுதியான நடவடிக்கைகள் மூலம், ஊழியர்களின் உரிமைகளை பெற்றுத்தர அயராது பாடுபடும் BSNLEUவின் மத்திய சங்கத்தை கோவை மாவட்ட  சங்கம் மனதார பாராட்டுகிறது.

நமது சங்கத்தின் இந்த சாதனையை அனைத்து ஊழியர்களிடமும் கொண்டு செல்வோம்.

BSNL ஊழியர் சங்கம் விடுத்த உண்ணாவிரத போராட்ட அறைகூவல் மகத்தான வெற்றி

 ஜனவரி மாத ஊதியத்தை உடனே வழங்கு, உரிய தேதியில் ஊதியம் வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக BSNL ஊழியர் சங்கம் விடுத்திருந்த உண்ணா விரத போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை சட்ட விரோதம் என அறிவிக்க BSNL நிர்வாகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. ஊழியர்களை மிரட்டுவதற்காக, ஒரு மிரட்டல் கடிதத்தையும் கார்ப்பரேட் அலுவலகம் அனைத்து CGMகளுக்கும் அனுப்பியது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிராக கார்ப்பரேட் அலுவலகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதும், நமது கிளை, மாவட்ட மாநில சங்கங்களின் கடுமையான முயற்சிகளின் காரணமாக இந்த உண்ணாவிரதம் மகத்தான வெற்றி பெற்றதை கண்டு மத்திய மாநில, மாவட்ட  சங்கங்கள் பெருமிதம் கொள்கிறது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு பெற்ற அத்தனை நிரந்தர, ஒப்பந்த ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் கோவைமாவட்ட சங்கம் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், பாராட்டுதல்களையும் உரித்தாக்கிக் கொள்கிறது.

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட மாநாடு

   BSNL ஊழியர் சங்கம்

                                    கோவை மாவட்டம்         

அறிக்கை எண் 2                                                         தேதி:19-02-2021

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட மாநாடு

தோழர்களே வணக்கம் ,

            நமது 9வது மாவட்ட மாநாடு பொள்ளாச்சி மயூரா மஹாலில்  தோழர்.கே.மாரிமுத்து நினைவு அரங்கில் 12 மற்றும் 13 பிப்ரவரி 2021 ல் சிறப்பாக நடைப்பெற்றது. 12-02-2021 அன்று  முதல் நாளில் மாலை 3-00 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர்.முகமது ஜாபர் அவர்களின் தலைமையில் துவங்கிய மாநாட்டை தோழர்.சசிக்குமரன்,   மாவட்ட உதவிப்பொருளர்  அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் .மாநில அமைப்புச்செயலர் தோழர்.என்.சக்திவேல் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.மாவட்ட செயலர் தோழர்.சி.ராஜேந்திரன் அவர்கள் மாநாட்டு அறிக்கையை அறிமுகப்படுத்தி கடந்த 27-04-2017 உடுமலை மாநாட்டில் இருந்து தற்போதைய மாநாடு வரை நடந்த நிகழ்வுகள்,இயக்கங்கள்,போராட்டங்கள்,தீர்க்கப்பட்ட பிரச்சனைகள்,தோழமை சங்கங்களின் உறவு,மத்திய ,மாநில சங்கங்களின் சாதனைகள், தீர்வு கண்ட இயக்கங்கள் மற்றும் உலக,அகில,மாநில அளவில் தற்போதைய நிலைகளை விரிவாக விளக்கி அறிமுக உரையாற்றினார்.பின் அறிக்கையின் மீதான விவாதங்களில்  9 கிளைகளின்  சார்பில் பிரதிநிதி தோழர்கள்  கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பின் வரவு செலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. பின் அறிக்கை மற்றும் வரவு செலவு ஏற்கப்பட்டு முதல் நாள் நிகழ்வை மாலை 06.45 மணி அளவில் இறுதியாக மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.A.Y.அப்துல் முத்தலீப் அவர்கள் நன்றி கூறி முடித்து வைத்தார் முடிவடைந்தது. மாநாட்டில் தோழமை சங்கங்களில் சார்பில் தோழர்கள் ஏ.குடியரசு-DS,AIBDPA, B.காவேட்டிரங்கன்,DS-AIBSNLEA ,S.சண்முகசுந்தரம் ,DS-TNTCWU , கே.மகாலிங்கம் விவசாயி சங்கம் பொள்ளாச்சி ,ஜி.பழனிச்சாமி போக்குவரத்துக்கழகம் மாவட்ட சங்க பொறுப்பாளர் இரண்டாம் நாள் மாநாட்டில் CITU சங்கத்தின் கோவை மாவட்ட செயலர் தோழர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்

இரண்டாம நாள்( 13-02-2021) அன்று காலை 10.30 மணி அளவில் துவங்கிய மாநாட்டில் தேசியக்கொடியை மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.பி.தங்கமணி அவர்களும், சங்கக்கொடியை மாநில உதவிச்செயலர் தோழர்.எஸ்.சுப்பிரமணியன் அவர்களும் எழுச்சிமிகுந்த கோசங்களுக்கிடையே ஏற்றிவைத்தனர்.

      மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.என்.ராமசாமி அவர்கள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.

வரவேற்புக்குழு செயலர் தோழர்.ஆர்.பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.பின் முன்னதாகவே துவங்கிய சேவை கருத்தரங்கை மாவட்ட செயலர் துவக்கி வைத்து கடந்த காலங்களில் நமக்கும் நிர்வாகத்திற்கும் இடையே உள்ள உறவுகள் ,சேவைகளில் நமது சங்கத்தின் செயல்பாடுகள் , கீழ்மட்ட அளவில் உள்ள பலவீனங்கள் மற்றும்   ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகளில் நமது நிலைபாடு ,அவற்றில் நமது  PGM அவர்களின் சுமூகமான தலையீடு ஆகியவற்றை பற்றி உரையாற்றினார். AGM (ADMN) திரு.ஆர்.முருகேஷன் அவர்கள் சேவைகள் பற்றியும் அவற்றை பற்றி நமது தீர்வுகள் பற்றி எடுத்துரைத்தார். அதன்பிறகு உரையாற்ற வந்த நமது PGM  அவர்கள் தற்போதைய நிர்வாகத்தின் நிலைகளை பற்றியும் அவுட் சோர்ஸ் விட்ட பிறகு நமது மாவட்டத்தில் நிலவும் பலம், பலவீனம் பற்றியும், VRS 2019 க்கு முன்பும் ,அதன் பின்பும் நமது சங்கத்தின் நேர்மையான  தலையீடுகளில் உள்ள தன்மைகளில் ஒத்துழைத்து தீர்வு கண்டதையும் , ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளில் தலையீட்டு தீர்வுகண்டதையும் நினைவுகூர்ந்து சேவையை மேம்படுத்த நாம் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் பற்றி கூறி சேவைக்கருத்தங்கில் உரையாற்றினார்.

அதன்பின் துவக்க உரை ஆற்றிய நமது மாநில செயலர் தோழர்                      A.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், மத்திய   அரசின் ஊழியர் விரோதபோக்குகள் பற்றியும் , பொதுத்துறைகளையும், அரசுத்துறைகளையும் தனியார்மயப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளையும், விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு விரோதமாகவும்  மத்திய அரசின் செயல்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

அடுத்ததாக சிறப்புரையாற்ற வந்த தோழர்.S.செல்லப்பா,AGS , மாநாட்டை சிறப்புடன் ஏற்பாடுகளை செய்ததற்காக பாராட்டினார்.இன்றைய அரசியல் சூழல், வேளாண் மக்களின் போராட்டங்கள் , இன்றைய சூழலில் நமது கடமைகள் , புதிய GTI திட்டம், எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும்,  போராட்டங்கள் பற்றியும்,, சென்னையில் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மத்திய செயற்குழு கூட்டம் , கூட்டுறவு சங்கத்தின் தற்போதைய  நிலைக்கு யார் காரணம் , தீர்வுக்கு நம் சங்கம் எடுத்த முயற்சிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பின் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் கடந்த மாநாட்டிற்குப்பிறகு ஓய்வு பெற்ற மற்றும் விடுபட்ட  கிளைச்செயலர்கள், மாவாட்ட நிர்வாகிகள் ,மாநில பொறுப்பாளர்கள் பாராட்டபட்டு அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தோழர்.S.செல்லப்பா,AGS ,அவர்கள் பணி ஓய்வுபெற்ற தோழர்களை வாழ்த்திபேசினார் .தவிர வரவேற்புக்குழு உறுப்பினர்களும் பாராட்டு  பெற்றனர்.

      தோழர்.S.செல்லப்பா,AGS அவர்களின் தொழிற்சங்க பணியை வாழ்த்தி தோழர்கள்.S.சுப்பிரமணியன், மாநில உதவிச்செயலர் மற்றும், N.P.ராஜேந்திரன், மாநில அமைப்புச்செயலர், C.ராஜேந்திரன் மாவட்ட செயலர் அவர்களும் உரையாற்றினார்கள் ,தோழர்களின் அன்பு மழையில் அவர் திகைத்தார் என்றால் அது மிகையில்லை.வாழ்த்தை ஏற்ற தோழர்.S.செல்லப்பா ,AGS தனது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.மாநாட்டின் அரங்கம் தோழர்.கே.மாரிமுத்து பெயரில் அழைக்கப்பட்டதை பெருமையுடன் குறிப்பிட்டார்.மாவட்ட செயலர் CR அவர்களின் பணிகளை பாராட்டி பேசினார்.

தோழர்.என்.சக்திவேல், மாநில அமைப்புச்செயலர்  தீர்மானக் கமிட்டி சார்பாக தயாரித்த தீர்மானங்களை தோழர்.வி.சந்திரசேகரன், மாவட்ட உதவிச்செயலர் முன் மொழிந்தார் .அது ஏகமனதாக ஏற்கப்பட்டது.

1)    

மாநாட்டின் நிகழ்வுகளை தோழர்கள்.வி.கே.அன்புதேவன்,என்.குமரவேல், அடங்கிய மினிட்ஸ் குழு பதி செய்தது சிறப்பு

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இதற்கான முன்மொழிவை தோழர் மாவட்டசெயலர் சி.ராஜேந்திரனும் ,மாநில உதவிச்செயலர் தோழர்.எஸ்.சுப்பிரமணியன் வழி மொழிந்தார்.அந்த பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் வருமாறு

தலைவர்

P.கல்யாணராமன்,TT

திருப்பூர்

துனை தலைவர்

P.ரகுநாதன்,TT

கோவை

துனை தலைவர்

A.சின்னான்,JE

உடுமலை

துனை தலைவர்

M.முருகன்,JE

கோவை

துனை தலைவர்

V.விஜேஸ்வரி,AOS(G)

பொள்ளாச்சி

செயலர்

செள.மகேஸ்வரன்,SOA(G)

கோவை

உதவி செயலர்

C.சசிக்குமரன்,TT

கோவை

உதவி செயலர்

C.முருகானந்தன்,JE

பல்லடம்

உதவி செயலர்

A.சாஹீன் அகமது,AOS(TG)

கோவை

உதவி செயலர்

S.மனோகரன்,JE

பொள்ளாச்சி

பொருளாளர்

B.சரவணகுமார்,AOS(G)

கோவை

உதவி பொருளாளர்

A.Y.அப்துல் முத்தலீப்,TT

கோவை

அமைப்புச்செயலாளர்

V.சந்திரசேகரன்,TT

மேட்டுப்பாளையம்

அமைப்புச்செயலாளர்

G.ராஜராஜன்,JE

திருப்பூர்

அமைப்புச்செயலாளர்

K.லோகநாதன் ,TT

கோவை

அமைப்புச்செயலாளர்

S.சரத்கங்கா,JE

கோவை

அமைப்புச்செயலாளர்

R.ரகுநாதன்,TT

மேட்டுப்பாளையம்

அமைப்புச்செயலாளர்

J.அருண்குமார்,TT

திருப்பூர்

அமைப்புச்செயலாளர்

T.முருகானந்தம்,ATT

திருப்பூர்

ஆடிட்டர்

A.யாக்கூப் ஹீசைன்,OS(G)

கோவை

மொத்தத்தில் என்றும் நினைவில் நிற்கும் மாநாடாக 9 வது மாவட்ட பொள்ளாச்சி மாநாடு நிற்கும் என்பதில் திண்ணம்.

முன்னாள் மாவட்டசெயலர் தனது செயல்பாட்டுக்கு பேருதவி புரிந்த  அனைத்து தோழர்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றார்.

புதிய நிர்வாகிகள் அனைவராலும் பாராட்டப்பட்டனர்.நினைவில் நிற்கும் புகைப்பட நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர்.செள.மகேஸ்வரன் மாநாட்டை சிறப்பாக நடத்தி கொடுத்த பொள்ளாச்சி வரவேற்புக்குழு தோழர்களுக்கும்,அகில இந்திய உதவிப்பொதுச்செயலர் தோழர்.எஸ்.செல்லப்பா அவர்களுக்கும், தமிழ் மாநில செயலர் தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் , மாநில சங்க நிர்வாகிகளுக்கும், மாவட்ட ,கிளை சங்க நிர்வாகிகளுக்கும், ஒப்பந்த ஊழியர்களுக்கும், மாநாட்டில் கலந்து கொண்ட கோவை மாவட்ட  PGM , AGM(ADMN), DE (POL) உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், மாநாட்டை சிறப்பாக  நடத்த நன்கொடைகளை வழங்கிய அனைத்து தோழர், தோழியர்களுக்கும் , தோழமை சங்க தலைவர்களுக்கும்,  ஓய்வூதியர் சங்கத்தினருக்கும் மாநாட்டில் எதிர்வரும் காலங்களை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் இளைய தோழர்களை தேர்ந்தெடுக்க வழிகாட்டிய சங்க இந்நாள் தலைவர்களுக்கும், ஓய்வு பெற்ற தலைவர்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு மாநாட்டை நன்றி கூறி முடித்து வைத்தார். 

 

தோழமை வாழ்த்துக்களுடன்

 

செள.மகேஸ்வரன்

மாவட்ட செயலர்

 

 

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

உரிய தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் அறிக்கை எண் 1

 BSNL ஊழியர்சங்கம் – கோவை மாவட்டம்

உரிய தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் அறிக்கை எண்1- 16-02-2021

  

தோழர்களே வணக்கம்,

        மத்திய சங்கத்தின் அறைகூவலின்படி வரும் 18 ம் தேதி அன்று மாவட்டத்தில்  ஐந்து மையங்களில் உண்ணாவிரதப்போரட்டத்தை நடத்த மாவட்ட சங்கம் கேட்டுகொள்கிறது.

        அதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிளைகளுக்கு சென்று ஒவ்வொரு உறுப்பினரிடமும் சென்று உண்ணாவிரதப்போரட்டத்தின் நோக்கத்தை கொண்டு செல்லவேண்டும்.மேலும் மாவட்ட மாநாடு சிறக்க ஒத்துழைத்த  அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ள வேண்டுகிறோம்.

மாவட்ட சங்க நிர்வாகிகள் சுற்றுப்பயண விபரம் (17-02-2020)

வ.எண்

கிளைகள்

தலைவர்கள்

1

கோவை மெயின்,

DE செண்ட்ரல்

செள.மகேஸ்வரன்,எம்.முருகன்,S.சரத்கங்கா பி.ரகுநாதன்,வி.கே.அன்புதேவன்,யாக்கூப் ஹீசைன்

2

டெலிகாம்பில்டிங்

B.சரவணக்குமார், வி.கருணாகரன், சி.சசிக்குமரன்

3

கணபதி

சாஹீன் அகமது, பி.ராஜேந்திரன்

4

மேட்டுப்பாளையம்

V.சந்திரசேகரன்,R.ரகுநாதன்,கே.சுரேஷ்குமரன்

5

பொள்ளாச்சி

எஸ்.மனோகரன்,வி.விஜேஸ்வரி,ஆர்.பிரபாகரன்

6

திருப்பூர் மெயின்,EXTNL

S.சுப்பிரமணியன்ACS,பி.கல்யாணராமன்,G.ராஜராஜன், சி.முருகானந்தன், J.அருண்குமார்,T.முருகானந்தம்

7

உடுமலை

என்.சக்திவேல்,COS,A.சின்னான்,மயில்சாமி,

8

பிளமேடு

 A.Y.அப்துல் முத்தலீப்,ஜான் ரோஸ்

9

குறிச்சி

K.லோகநாதன், சி.லாரன்ஸ்

 கோரிக்கைகள்

1)   மாதம் மாதம் உரிய தேதிகள் முறையாக ஊதியம் வழங்கு

2)   JTO / JE / JAO / JTO / TT இலாக்கா தேர்வுகளை உடனடியாக நடத்து

3)    3 வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக DOT வழங்கியுள்ள வழிகாட்டுதல் படி பேச்சு வார்த்தையை உடனே துவங்கு.

4)   பணியில் உள்ள ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ பில்களை பட்டுவாடா செய். அங்கீகரிக்கப்ப்ட்ட  மருத்துவமனைகளில் தங்கு த்டையில்ல இலவச மருத்து சேவைகளை உத்திரவாதப்படுத்து

5)   ஒப்ப்ந்த ஊஇழ்யர்களுக்கு ஊதிய நிலுவை வழங்கு ஆட்குறைப்பு செய்யாதே.

6)   தரைவழி மற்றும் பிராட்பேண்ட் பராமரிப்பு பணிகளில் கடைபிடிக்கப்படும் அவுட்சோர்ஸிங்  முறையை மறு பரிசீலனை செய்க

7)   கருணை  அடிப்படையிலான பணி நியமன த்டையை நீக்கு

8)   ஊழியர்களுக்கு 50% சலுகையுடன்  FTTH இணைப்பு வழங்கு

தோழர்களே  ! நியாயமான நமது உரிமைகளை வென்றெடுக்க போராட்டம் ஒன்றே தீர்வு என்ற அடிப்படையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் விடுப்பு எடுத்து திரளாக பங்கேற்போம்            

வ.எண்

இடங்கள் (பங்கேற்கும் கிளைகள்)

பங்கேற்போர்

1

கோவை மெயின் ( PGM(O), பீளமேடு, குறிச்சி,டெலிகாம்பில்டிங்,கணபதி,DE செண்டரல் கிளைகள்)

கோவை பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள், AIBDPAமாவட்டசங்கநிர்வாகிகள், TNTCWUசங்கமாவட்டநிர்வாகிகள்,கிளைசெயலர்கள்

2

திருப்பூர் மெயின் (திருப்பூர் EXTNL, திருப்பூர் மெயின் கிளைகள்)

திருப்பூர் பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள், AIBDPAமாவட்டசங்கநிர்வாகிகள்,TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்

3

பொள்ளாச்சி  கிளை

 

பொள்ளாச்சி பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள்,AIBDPAமாவட்டசங்கநிர்வாகிகள், TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்

4

மேட்டுப்பாளையம் கிளை

மேட்டுப்பாளையம் பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள், AIBDPAமாவட்டசங்க நிர்வாகிகள், TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்

5

உடுமலை கிளை

உடுமலைபகுதிமாவட்டசங்கநிர்வாகி, கிளைச்செயலர்,AIBDPA மாவட்ட சங்கநிர்வாகிகள், TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்

 ஆர்பரித்து போராடுவோம்  !  கோரிக்கைகளை வென்றெடுப்போம் !

போராட்ட வாழ்த்துக்களுடன்

செள.மகேஸ்வரன்

மாவட்ட செயலர்